நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது - பத்திரமாகத் தரையிறக்கிய விமானி!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிரக்க முடிவு செய்தனார்.
இதையும் படியுங்கள் : கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி… ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
அதன்படி, அவர் விமானத்தை சாதுர்யமாக இயக்கி திட்டமிட்ட நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். விமானியின் இந்த செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 5 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.