For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவிப்பு!

டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
07:56 AM May 05, 2025 IST | Web Editor
இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவிப்பு
Advertisement

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருதரப்பினரும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுபோன்ற ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருந்த போதும், ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் ராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும், டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தையும் இன்று ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Tags :
Advertisement