For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக மாமன்ற உறுப்பினரின் உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு! - தாம்பரத்தில் பரபரப்பு!

10:04 PM Apr 28, 2024 IST | Web Editor
அதிமுக மாமன்ற உறுப்பினரின் உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு    தாம்பரத்தில் பரபரப்பு
Advertisement

தாம்பரம் அருகே அதிமுக மாமன்ற உறுப்பினர் உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத்தில் அதிமுக வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் கொளப்பாக்கத்தில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப். 28) அதிகாலை 5 மணியளவில் தனது மனைவி, மகனுடன் உணவுகளை தயாரித்து கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ‘கில்லி’ படத்தை திரையில் பார்த்து ரசித்த,படத்தின் இயக்குநர் தரணி மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர்!

அந்த நாட்டு வெடிகுண்டு உணவகத்தின் கேட் கிரிலில் பட்டு பலத்த சத்ததுடன் வெடித்துள்ளது. இதில் நெருப்பு மற்றும் பலத்த சத்தத்துடன் கடும் புகை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் முத்துபாண்டி புகார் அளித்தார். தகவல் அறிந்த தாம்பரம் துணை ஆணையாளர் பவன்குமார்ரெட்டி, உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் வெடித்து சிதறிய பொருட்களை சேகரித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவிகாட்சிகளை ஆராய்ந்து ஒருவரை பிடித்து விசாரண நடத்தி வருகின்றனர். அதன்படி பிடிப்பட்ட நபர் அன்பழகன் என்பதும், எதற்காக உணவகத்தில் நாட்டுவெடிகுண்டு வீசினார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒட்டேரி வண்டலூர் பகுதியில் நாட்டுவெடி குண்டு வீசி திமுக பிரமுகர் கொல்லப்பட்ட நிலையில் அதே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அதிமுக பிரமுகரை குறி வைத்து நாட்டு வெடிகுண்டு வீசியது பெரும் பரப்பரப்ரை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement