Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்க திட்டம்!

09:05 AM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement

தமிழகத்தில் கள்ளச்சாரய புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருத்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள்ளகுறிச்சியில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர மீண்டும் அது குறித்து பேச அனுமதி அளிக்க அவையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து பேரவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

வெள்ளிக்கிழமை எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரை அவைக் காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர். அதனால் அன்றயை தின சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிமுக புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினர்.

பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி முழக்கங்களையும் எழும்பினர். இந்நிலையில் இன்றயை சட்டப்பேரவை நிகழ்வுகளையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags :
AIADMKKallakurichiProtestTN AssemblyTN Assembly 2024
Advertisement
Next Article