For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலம் அதிமுக நிர்வாகி கொலை: திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது!

02:19 PM Jul 04, 2024 IST | Web Editor
சேலம் அதிமுக நிர்வாகி கொலை  திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட  9 பேர் கைது
Advertisement

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக கிளைச் செயலாளர் சண்முகம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேரை கைது செய்து தனிப்படை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சண்முகம். இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதனால், அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் சண்முகத்தின் இறப்புக்கு காரணம் திமுக பிரமுகர் ஒருவர் தான் என்று கூறி, அவரை கைது செய்யுமாறும், அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் (48),  அருண்குமார் (28), முருகன் (23), பாபு(45), சீனிவாசன் (25), பூபதி (25), கருப்பண்ணன் என்ற சந்தோஷ் (31), கௌதமன் (33), நவீன் (25) உள்ளிட்ட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும், சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாக சண்முகத்தின் மனைவி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement