மாநிலங்களைத் தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக!
தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்கலவை உறுப்பினர்களான அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என்.சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வைகோ, பி. வில்சன் ஆகியோரது பதவிகாலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதன் காரணமாக காலியாவுள்ள இடங்களுக்கான மாநிலங்களைத் தேர்தல் வருகிற ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து திமுக தனது மாநிலங்களை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்., எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு மாநிலங்களை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் போட்யிட உள்ளனர். முன்னதாக அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கி தருவதாக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.