Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
08:56 PM Jun 12, 2025 IST | Web Editor
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது. விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் விமான விழுந்த இடத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். விமான விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக்கல்லூரியின் விடுதியும் புதிதாக கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
AhmedabadCompensationplane crashTata Group
Advertisement
Next Article