Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு - #VCK மாநாட்டில் தீர்மானம்!

06:44 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இம்மாநாட்டில் விசிக கொடியை திருமாவளவன் எம்பி ஏற்றி வைத்து தீர்மானங்களை வாசித்தார்.

இந்த மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஎம் கட்சியிலிருந்து வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் ஃபாத்திமா முஸப்பர், காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

Tags :
Anti Drug Conferencethirumavalavan mpVCK
Advertisement
Next Article