அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ₹8,339 கோடி முதலீடு செய்த அதானி!...
தொழிலதிபர் கவுதம் அதானியின் குடும்பம் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.8,339 கோடி கூடுதலாக முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் நிறுவனத்தில் அவரது பங்கு 70.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை, சிமென்ட் நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குடும்பம் முன்னதாக அக்டோபர் 18, 2022 அன்று நிறுவனத்தில் ரூ. 5,000 கோடியும், மார்ச் 28, 2024 அன்று ரூ.6,661 கோடியும் முதலீடு செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சமீபத்திய முதலீட்டின் மூலம் அதன் ரூ.20,000 கோடி திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
வளர்ச்சிக்கு பணம் பயனுள்ளதாக இருக்கும்
அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அஜய் கபூர், கூறுகையில், “அம்புஜாவில் அதானி குடும்பத்தின் ஆரம்ப முதலீடு ரூ.20,000 கோடியை நிறைவு செய்வதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முதலீடு அம்புஜாவிற்கு வலுவான இருப்புநிலை மற்றும் விரைவான வளர்ச்சிக்கான மூலதனத்தை வழங்குகிறது."
இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,22,514.31 கோடி
அம்புஜா சிமென்ட் பங்குகள் 1.68 சதவீதம் அல்லது ரூ.10.20 உயர்ந்து ரூ.617 ஆக இருந்தது. இந்தப் பங்கின் 52 வார அதிகபட்ச மதிப்பு ரூ.640.95. அதேசமயம், 52 வாரக் குறைந்த அளவு ரூ.373.30. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,22,514.31 கோடியாக நிறைவடைந்தது.