For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

09:41 AM Mar 08, 2024 IST | Web Editor
ரசிகர்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா
Advertisement

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது.  தமிழில் 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள் : மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நயன்தாரா,  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு,  இந்தி மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளிக் குவித்து இந்தியில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்தது.  ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயனுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதையடுத்து, சினிமா துறையில் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நயன்தாரா,  இயக்குநர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார்.  அதன் பின் வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார்.  சமீபத்தில் பெண் தொழிலதிபராகவும் நயன்தாரா களமிறங்கியுள்ளார்.

அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நயன்தாரா,  அடிக்கடி விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடனான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்-பாலோ செய்ததாகவும்,  அதை ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில்,  நயன்தாரா மீண்டும் விக்னேஷ் சிவனை பாலோவ் செய்தார் எனவும் செய்திகள் சமுக வலைதளத்தில் வைரலாகியது.  சமீபத்தில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “Umm… I’m Lost” என்று பகிர்ந்தது ரசிகர்கள் மத்தியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உறவு குறித்து பல கேள்விகள் கிளம்பியது.

இதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் எழுந்த சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதத்தில் தற்போது நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.  அதில்,  தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைபடத்தை பகிர்ந்துள்ளார்.  நீண்ட நாட்களுக்கு பின் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெகு தூரம் பயணிப்பதாகவும் இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement