For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்... அலைமோதிய ரசிகர் கூட்டம்.. 

05:17 PM Feb 29, 2024 IST | Web Editor
திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்    அலைமோதிய ரசிகர் கூட்டம்   
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்ற போது பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் குவிந்தனர்.

Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான 3-வது திரைப்படம் லால் சலாம்.  இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.  லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் ‘கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவான இப்படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’  திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.  மேலும், இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன்,  மஞ்சு வாரியர்,  ரித்திகா சிங்,  துஷாரா விஜயன்,  ராணா டகுபதி,  பகத் பாசில் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம்,  திருநெல்வேலி,  மும்பை ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில்,  அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்றது.   ‘வேட்டையன்’ திரைப்படத்தின் டீசர் ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், சென்னை ஒட்டியுள்ள நாவலூர் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் புதியதாக இடம் ஒன்று வாங்கியுள்ளார்.  அதனை பத்திரப்பதிவு செய்வதற்காக செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இன்று சென்றார்.  இதனால் திருப்போரூர் பகுதியில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்  குவிந்து, நடிகர் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
Advertisement