Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ICU-வில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

10:06 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

ரத்த நாள சீரமைப்பு சிகிச்சைக்குப் பிறகு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், தனியறை வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்.30-ம் தேதி திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்று பகுதியில் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மற்றும் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியானது.

பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். 24 மணி நேரம் ஐசியூ-வில் இருப்பார். அதன்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரத்த நாள சீரமைப்பு சிகிச்சைக்குப் பிறகு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், தனியறை வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்புக்குள்ளான அவருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருந்ததையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது தனது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கான உடல் தகுதியுடன் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags :
ApollohospitalICURajinikanth
Advertisement
Next Article