For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘அயலான்’-ஐ பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்...!

06:51 AM Jan 27, 2024 IST | Jeni
‘அயலான்’ ஐ பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
Advertisement

‘அயலான்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களும், இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றன.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்கும் நிலையில், ‘அயலான்’ திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள ‘அயலான்’ திரைப்படம், ரூ.78 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால், இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள் : “ரஜினிகாந்த் சங்கி இல்லை!” – ‘லால் சலாம்’ இசைவெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு!

இந்நிலையில், ‘அயலான்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ‘அயலான்’ திரைப்படம் பிரமாண்டமாக இருந்ததாகவும், இதேபோன்று சிறந்த திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement