Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!" - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

10:14 PM Dec 05, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Advertisement

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நாளையும் ஆவின் பால் இலவசமாக தரப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிகளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
aavin milkAndhra PradeshcancelChennaiChennai rainsCycloneCyclone MichuangHEAVY RAIN FALLIndiaMichuangnews7 tamilNews7 Tamil UpdatesOrange alertrailwayTamilNaduTrainweather forecast
Advertisement
Next Article