Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
01:51 PM Aug 22, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Advertisement

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்று ஆவணி திருவிழா. இந்த நிலையில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Advertisement

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7-ம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்திலும், 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் நாளை (23-08-2025) காலை 7-00 மணிக்குமேல் 7-30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

இதில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Tags :
Aavani festivalchariot parademurugantemplesubramaniyaswamiTiruchendur Temple
Advertisement
Next Article