For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.50 கோடி வசூலைக் கடந்த ஆடுஜீவிதம் - அதிவிரைவில் ரூ.50கோடி வசூலித்து புதிய சாதனை!

04:24 PM Mar 31, 2024 IST | Web Editor
ரூ 50 கோடி வசூலைக் கடந்த ஆடுஜீவிதம்   அதிவிரைவில் ரூ 50கோடி வசூலித்து புதிய சாதனை
Advertisement

சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் ரூ.50 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisement

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் . இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.

கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டு கொட்டகைகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு.  2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.  கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.

தற்போது இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிவிரைவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்கிற பெருமையையும் ஆடு ஜீவிதம் பெற்றுள்ளது.

Tags :
Advertisement