Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் மர்ம முறையில் உயிரிழப்பு...

11:16 AM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் விக்னேஷ்.  இவரது மனைவி கோமதி (26). இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு
காதல் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கூலி வேலைக்கு செல்லும் விக்னேஷ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம்
தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம்,
போச்சம்பள்ளி அந்தேரிபட்டியில் வசித்து வரும் தனது தாய் ரமணியிடம் கோமதி
தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், நேற்று ரமணிக்கு போன் செய்த விக்னேஷ் உங்களது மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொளசம்பட்டிக்கு வந்தனர்.  அங்கு வீட்டில் கோமதி சடலத்தை இறக்கி வைத்திருந்தனர்.  மகளின் சடலத்தை பார்த்து ரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.  இது பற்றி தொளசம்பட்டி போலீசில் ரமணி புகார் கொடுத்தார்.  அதில், தனது மகளிடம் மருமகன் விக்னேஷ் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்வதாகவும்,  தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.  இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதியின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, கணவர் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து போலீசார் கூறும் போது தற்போது சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் உடற்கூறு ஆய்வுக்கு பின்பு வரும் தகவலை கொண்டு வழக்கு மாற்றப்படும் என தெரிவித்தனர்.

Tags :
CrimeNews7Tamilnews7TamilUpdatesSalemTholasampattiyoung girl
Advertisement
Next Article