அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ - உண்மைதானா?
This News Fact Checked by ‘The Quint’
ஆயுதமேந்திய நிலையில் சீருடை அணிந்த பணியாளர்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டவாறு மக்கள் வரிசையாக விமானத்தில் ஏறுவதைக் காட்டும் காணொலி ஒன்று வைரலாகியது. அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்ற கூற்றுடன் இந்த வீடியோ வைரலாகியது.
அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் சட்டவிரோத குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி 4 ஆம் தேதி நாடுகடத்தப்பட்ட 205 இந்தியர்களை ஏற்றி அமிர்தசரஸ் வந்த அமெரிக்க ராணுவ விமானம் என்கிற தலைப்பில் பல செய்தி அறிக்கைகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த கூற்றுடன் தொடர்புடையதாக பிப்ரவரி 5 ஆம் தேதி வீடியோ ஒன்று வைரலாகியது.
இந்த காணொளியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஐபி சிங் தனது X கணக்கில் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது அடுத்த அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிட்டு, நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை மரியாதையுடன் நடத்த டிரம்பிடம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து தி குயிண்ட் நடத்திய உண்மை சரிபார்ப்பில் இந்த காணொலியில் இருப்பது இந்தியர்கள் அல்ல, கொலம்பிய நாட்டினர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவதைக் அந்த காணொலி காட்டுவது குறிப்பிடத்தக்கது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் கிஃபிரேம்களை எடுத்து அவற்றை கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி வைரலான வீடியோவில் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்தினோம், அது எங்களை ஒரு இன்ஸ்டாகிராம் இடுகைக்கு இட்டுச் சென்றது.
MigramaX' என்ற பயனரால் பகிரப்பட்ட இந்தப் பதிவு, அதே கிளிப்பைக் காட்டியது மற்றும் ஸ்பானிஷ் மொழி ஊடக நிறுவனமான Noticias Telemundo இன் TikTok பயனர் பெயரைக் கொண்டிருந்தது. மேலும் இதே போன்ற காட்சிகளை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான சேனல் 4 நியூஸ் தங்கள் யூடியூப் சேனலிலும் பகிர்ந்து கொண்டது .
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் காணொலியைத் தேடினோம், ஜனவரி 29 அன்று பகிரப்பட்ட அதே காணொலியைக் கண்டோம். அதன் தலைப்பு : நாடு கடத்தப்படுபவர்கள் 40 பவுண்டுகள் (தோராயமாக 18 கிலோகிராம்) வரை சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றும், "கைவிலங்குகள், கால் விலங்குகள் மற்றும் வயிற்றில் ஒரு சங்கிலியுடன்" இராணுவ விமானத்தில் ஏற வைக்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாடுகடத்தப்பட்ட சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு இராணுவ விமானங்களை கொலம்பியா ஏற்க மறுத்துவிட்டது" என்று அந்த செய்தி அறிக்கை கூறியது. மேலும் அந்த வீடியோவில் உள்ள வாசகத்தில், விமானங்கள் மெக்சிகன் மற்றும் கொலம்பிய நாட்டினரை ஏற்றிச் சென்றதாகவும், இந்தியர்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் இந்திய செய்தி நிறுவனமான WION ஆகியவற்றின் அறிக்கைகளும் கொலம்பிய நாட்டவர்கள் பற்றிய தங்கள் வீடியோக்களில் இதே போன்ற காட்சிகளை உள்ளடக்கியிருந்தன.
இதேபோல பிலிப்பைன்ஸ் ஊடக நிறுவனமான ANC 24/7 பகிர்ந்துள்ள காணொலியின் நீண்ட பதிப்பையும் இங்கே காணலாம் .
முடிவு :
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியகளாக இருந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்திய அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. இதுகுறித்து திகுயிண்ட் நடத்திய உண்மை சரிபார்ப்பில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. வைரலாகும் இந்த காணொலியில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்றும் கொலம்பிய நாட்டினர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.