For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 25 பேர் பலி!

01:57 PM Nov 15, 2023 IST | Web Editor
ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து    300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து  25 பேர் பலி
Advertisement

ஜம்மு காஷ்மீர் தோடாவில் பேருந்து ஒன்று செங்குத்தான சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25  பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

ஜம்மு பிரிவின் தோடா மாவட்டத்தில் பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.  மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் பலர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றாக இயங்கியதாகவும், ஒன்றையொன்று முந்திச் செல்லும் பந்தயத்தில் இந்த பெரும் விபத்து நடந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement