Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது!

06:39 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

மயிலாடுதுறையில் நடமாடி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து 5வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள சுமார் 9 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.  சிறுத்தையை கண்காணிப்பதற்காக கடந்த மூன்றாம் தேதி செம்மங்குளம் பகுதியை சுற்றி தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

கடந்த இரு நாட்களாக வனத்துறையின் எந்த கேமராவிலும் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்த நிலையில், முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Forest DepartmentleopardMadiladuthuraiPolice
Advertisement
Next Article