For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜுனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து புதிய படமா? - #DirectorVetrimaran கொடுத்த சுவாரஸ்ய அப்டேட்!

05:48 PM Sep 21, 2024 IST | Web Editor
ஜுனியர் என் டி ஆர் உடன் இணைந்து புதிய படமா     directorvetrimaran கொடுத்த சுவாரஸ்ய அப்டேட்
Advertisement

ஜூனியர் என்.டி.ஆருடன் புதிய படத்தில் இணைய உள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Advertisement

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதிக்கவுள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இத்திரைப்படம் இந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட ஜூனியர் என்டிஆர் பேசியதாவது, “இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அனிருத் மிகவும் அற்புதமான திறமை கொண்டவர். ஹீரோவுக்கான பாடல், மெலோடி பாடல் எதுவாக இருந்தாலும் அவர் வேற லெவலில் தருகிறார். திறமை இல்லை என்றால் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை அவரால் தந்திருக்க முடியாது. இந்தியாவில் பலரும் அவரது இசையை விரும்புகிறார்கள்.

தென்னிந்தியாவில் இளையராஜா, கீரவாணி, ரஹ்மான் போன்ற பல சிறப்பான இசையமைப்பாளர்கள் உள்ளனர். தற்போது, அனிருத் இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அனிருத் மெதுவாக இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார். தேவரா படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவரது இதயத்தையும், ஆன்மாவையும் கொண்டு இசையமைத்துள்ளார்.

சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. 'தேவரா' எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. நாம் மொழியால் பிரிந்திருக்கிறோம். ஆனால் சினிமாவால் அல்ல. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று நம்மை பிரிக்க முடியாது. இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த மேடையில் கோரிக்கை வைக்கிறேன். உங்களுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரடியாக தமிழில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்துகொள்ள வேண்டும். ” என பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலானது.

இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட வெற்றிமாறனிடம் ஜூனியர் என்.டி.ஆரின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் "நான் அவரை ஏற்கெனவே சந்தித்து பேசியிருக்கிறேன். ஒரு கதையின் ஐடியா குறித்து பேசியிருக்கிறோம். இருவருமே எங்களுடைய பணிகள் முடித்தவுடன் இணைந்து பணிபுரிவோம்" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து பணிபுரிய இருப்பது உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement