Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்!

09:43 AM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதையும் படியுங்கள் : கனமழையால் சேரன்மகாதேவியில் வாழைகள், நெற்பயிர்கள் நாசம் - கள ஆய்வு பணியில் அரசு அதிகாரிகள் மும்முரம்!

அப்போது இரண்டு ஆண் பயணிகளை சோதனை செய்த போது இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருக்கி தங்களுடைய உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதேபோல பெண் பயணி ஒருவர் சானிட்டரி நாப்கினில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், மூவரும் கடத்தி வந்த 1.4 கிலோ எடை கொண்ட ரூ.89.51 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த மூவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
AirportGoldseizedTrichy
Advertisement
Next Article