உ.பி.கோயிலில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஜோடி!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பகதா பவானி கோயிலில் எதிர்ப்புகளை மீறி இந்துமத முறைப்படி தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயஸ்ரீ ராகுல் (28) மற்றும் ராக்கி தாஸ் (23). இரு பெண்களும் தியோரியாவில் உள்ள ஓர் இசைக் குழுவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.
இதையடுத்து, இவர்கள் முதலில் தங்களுடைய திருமணத்திற்கான நோட்டரி சான்றிதழைப் பெற்றனர். பின்னர், உத்தரப் பிரதேசம் டியோரியாவில் உள்ள பகதா பவானி கோயிலில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி இந்துமத முறைப்படி தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் - அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவரும், திர்கேஷ்வர்நாத் கோயிலில் திருமணம் செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால், அங்கே இவர்கள் திருமணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்ற காரணத்தினால், இவர்களுடைய திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இவர்கள் திருமணத்துக்கான மாற்றுவழியைத் தேடி உள்ளனர். அதன்பின், திருமணத்துக்கான நோட்டரி சான்றிதழைப் பெற்றுள்ளனர்.