For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அரை நூற்றாண்டை கடந்த திரையுலகின் மாபெரும் நாயகன்" - ரஜினிகாந்துக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து!

ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:52 AM Aug 13, 2025 IST | Web Editor
ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 அரை நூற்றாண்டை கடந்த திரையுலகின் மாபெரும் நாயகன்    ரஜினிகாந்துக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

Advertisement

"திரையுலகின் மாபெரும் நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்த இந்த சிறப்பான தருணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி. சமூகப் பணியிலும், திரையுலகச் சேவையிலும் உங்களின் பங்கு மறக்க முடியாதது. இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க. நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று என்றும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement