For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் #Odisha அருகே கரையை கடந்தது!

04:53 PM Sep 09, 2024 IST | Web Editor
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  odisha அருகே கரையை கடந்தது
Advertisement

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது. 

Advertisement

வடமேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் வடக்கு திசையில் நகா்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசா கடற்கரை அருகே கரையை கடந்தது. இன்று காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணி அளவில் ஒடிசா கடற்கரை பூரி அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி, ஜெகத்சிங்பூர், குர்டா, கட்டாக், தேன்கனல் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement