For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி - கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சோகம்..!

08:43 AM Jan 05, 2024 IST | Jeni
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி   கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சோகம்
Advertisement

ஆவடியில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (95). இவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா அம்மா (81). தனது மூத்த மகனோடு வசித்து வந்த இவர்கள், வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்தபடியே உடல்நலக்குறைவின்போது சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வசந்தா அம்மாளுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக சோகத்தில் இருந்த சுப்பிரமணியன், அதிர்ச்சி தாங்காமல் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து, நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தா அம்மா சுய நினைவு திரும்பியவுடன், கணவர் எங்கே எனக் கேட்டுள்ளார் அப்போது, சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வசந்தா அம்மாளின் உயிரும் பிரிந்துள்ளது. அடுத்தடுத்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள் : ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு

‘மயில் குயில்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த தம்பதி, எங்கு சென்றாலும் ஜோடியாகவே சென்று வந்ததாகவும், இருவருக்கும் இடையே எந்தவித பிரச்னை இல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும், அண்டை வீட்டார் மற்றும் அவரது உறவினர்கள் கூறினர். இந்த காதல் ஜோடி, இறப்பிலும் இணைபிரியாமல் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் வருத்தத்தோடு தெரிவித்தனர்.

Tags :
Advertisement