வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு | மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை...
11:52 AM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement
வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Advertisement
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய வட்டாட்சியர் காளிமுத்து மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.