விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு - சென்னை காவல்துறை அதிரடி!
08:33 PM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடித்தது என 118 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.