For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்... உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

07:39 AM May 02, 2024 IST | Web Editor
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்    உயிர்பிழைத்த குடும்பத்தினர்
Advertisement

திருச்செந்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து முழுவதும் கருகி நாசமாகியது. 

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்
அப்துல் ஹரீம்(35). இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் அடைக்கலாபுரம் அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காரில் தீப்பற்றியுள்ளது.

தீப்பற்றியவுடன் உடனடியாக அப்துல் ஹரிம் காரை நிறுத்திவிட்டு, குடும்பத்துடன் கீழே இறங்கி உள்ளார். கார் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

ஆனால், கார் முழுவதும் தீயில் எரிந்து கருகி நாசமாகியது. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement