For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய அணிக்கு பேரிடி! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து கோலி விலகல்...!

11:12 AM Feb 10, 2024 IST | Web Editor
இந்திய அணிக்கு பேரிடி  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து கோலி விலகல்
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியுள்ளார். 

Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரரான விராட் கோலி தொடர் துவங்க சில நாட்கள் இருக்கும் வேளையில் அணியில் இருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து முதல் 2 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும் நிச்சயம் எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,  மீதம் இருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.

மேலும் விராட் கோலி வெளியேறிய போது பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கையில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காகவே அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவரது விலகல் குறித்த எந்த யூகங்களையும் வகுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement