Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! - போலீசார் தீவிர விசாரணை...

03:33 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை மர்ம நபர்கள்
இருவர் தாக்கி 25 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சிக்கு
உட்பட்ட புழுதிவாக்கம் கிராமத்தில் பார்ம் ஹவுஸ் வீட்டில் 70 வயதான சரோஜினி மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரின் மகன் சென்னையில், பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இரவு சுமார் 11 மணியளவில் இரு மர்ம நபர்கள், அவர்கள் வீட்டுக்குள் புகுந்து, வீட்டில் தனியாக இருந்த சரோஜினியை இரும்பு ராடு கொண்டு தாக்கி விட்டு,  அவர் கழுத்தில் மற்றும் கையில் அணிந்து இருந்த தங்க நகை 25 சவரனை
கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதையும் படியுங்கள் : தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!

சற்று சுதாரித்துக் கொண்ட சரோஜினி அம்மாள், சென்னையில் உள்ள தனது மகனுக்கு
போன் செய்து உள்ளார். அவர் மகன் அங்கிருந்து மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரோஜினி அம்மாவை சிகிச்சைக்காக
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
#gold jewels#stolenattackedMaduranthakamOld Woman
Advertisement
Next Article