For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

08:20 PM Dec 18, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Advertisement

தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் இன்று  பேருக்கும், அதிகபட்சமாக 21 நபர்கள் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement