For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ #Christmas கேக் தயாரிக்கும் பணி துவக்கம்!

09:59 AM Oct 25, 2024 IST | Web Editor
பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ  christmas கேக் தயாரிக்கும் பணி துவக்கம்
Advertisement

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரதில் உள்ள கால்டன் சமுத்ரா தனியார்
நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது.  முந்திரி, திராட்சை,  பாதாம்,  பிஸ்தா உள்ளிட்ட 101 கிலோ டிரை புருட்ஸ் அடங்கிய பொருட்களுடன் லிக்கர் என்று சொல்லக் கூடிய ஒயின்,  ஓட்கா,  ஜின் உள்ளிட்ட மது பானங்களை ஊற்றி ஊற வைக்கும் பணி இன்று துவங்கியது.

இந்த நட்சத்திர விடுதியில் இன்று உருவாக்கிய கேக் தயாரிக்கும் பொருட்களை,  40 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாத இரண்டாம் வாரம் அல்லது அதற்கு மேல் வரை வைத்திருந்து அதன் பின் கேக் தயாரிக்கும் பணி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக ஷெஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்ததாவது,

"கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி இன்று துவங்கியது. 101 கிலோ டிரை புருட்ஸ் அடங்கிய பொருட்களுடன் ஒயின்,  ஓட்கா,  ஜின் உள்ளிட்ட மது பானங்களை ஊற்றி ஊற வைத்துள்ளோம். இதனை 45 முதல் 50 நாட்கள் வரை ஊறவைப்போம். பின்னர் டிச.15 முதல் 20 ம் தேதிக்குள் தேதி தயாரிக்கும் பணியை தொடங்குவோம். கேக் தயாரிக்கும் பணியை இவ்வாறு கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது."

இவ்வாறு ஷெஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்தார்.

Tags :
Advertisement