For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை - ரூ.1,760 கோடி பறிமுதல்!...

10:24 AM Nov 21, 2023 IST | Web Editor
5 மாநில தேர்தல்   அதிரடி காட்டும் பறக்கும் படை   ரூ 1 760 கோடி பறிமுதல்
Advertisement

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.  மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நவ.23 மற்றும் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் டிச.3ம் தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் இம்மாநிலங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்கம் ஆகியவை பறக்கும் படையினரால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.1760 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2018-ம் ஆண்டில்  இதே மாநிலங்களில் நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றப்பட்டதை விட 7 மடங்கு (ரூ. 239.15 கோடி) அதிகமாகும்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி,  நவ.20ம் தேதி நிலவரப்படி, தெலங்கானாவில் அதிகபட்சமாக  ரூ.659 கோடியே 20 லட்சம் மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், ஆபரணங்கள் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக குஜராத்,  இமாச்சலப் பிரதேசம்,  நாகாலாந்து, மேகாலயா,  திரிபுரா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது ரூ.1400 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement