Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் - தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

10:10 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 ஹெலிகாப்டரில் நாளை உணவு விநியோகம் செய்ய உள்ளதாக தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தென் மாவட்டங்களின் நிலவரம் – டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.!

பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள உள்துறை செயலர் அமுதா, போக்குவரத்துறை செயலர் பனிந்திரரெட்டி ஆகியோருடன் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  மேலும் தலைமைச் செயலர்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழ்நாடு டிஜிபி,  4 மாவட்ட ஆட்சியர்கள்,  செயலர்கள், முதல்வரின் தனி செயலர் முருகானந்தம் ஆகியோருடன் டெல்லியிலிருந்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்ததாவது..

“ 4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தேசிய மீட்பைச் சார்ந்த 10 குழுக்கள் மற்றும் விமானப்படை மூலமாக 1000 கிலோ உணவு விநியோகம் ஏற்பாடு செய்துள்ளோம்.  நாளை 5 ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்து உள்ளோம்.

விமான நிலையங்கள் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. 106 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9705 நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதிகளில் நீர் சற்று வடிய ஆரம்பித்துள்ளது.  சென்னையில் இருந்து 100 பம்புகள் அனுப்பி வைத்து உள்ளோம். 18 லாரிகளில் உணவு பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது நாளை காலை மக்களுக்கு வழங்கப்படும்.

அரசின் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். அனைத்து அரசு அதிகாரிகளும் களத்தில் இருக்கிறார்கள். ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களில் சில பேரும், அருகில் உள்ள மண்டபத்தில் சில பேரும் தங்க வைக்கபட்டுள்ளார்கள். ஹெலிகாப்டரில் உணவு அளிக்க சென்ற போது பனி மூட்டம் இருந்ததால் அவர்களுக்கு சரியான முறையில் உணவு அளிக்க முடியவில்லை “ என சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari RainsNellaiNellai FloodsNews7Tamilnews7TamilUpdatesrain alertrainfallTamilnadu RainsTenkasi RainsThoothukudiThoothukudi RainsTirunelveli Rains
Advertisement
Next Article