Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையின் 47 வது புத்தகக் காட்சி - இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

12:13 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement
47-வது சென்னை புத்தக காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது.

Advertisement

புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்.  தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறரையாற்றுகிறார்.

Advertisement
Next Article