For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையின் 47 வது புத்தகக் காட்சி - இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

12:13 PM Jan 03, 2024 IST | Web Editor
சென்னையின் 47 வது புத்தகக் காட்சி    இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
47-வது சென்னை புத்தக காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது.

Advertisement

புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்.  தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறரையாற்றுகிறார்.

Advertisement