Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும்!” - சென்னை உயர்நீதிமன்றம்!

08:51 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்ற 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டத்தில்,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக
நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த 2011ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2014 முதல் 2017 வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி
பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து பணி நியமனத்துக்காக, ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறையை மாற்றி, போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு
நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கக் கோரி, 410 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு பாதியில் கைவிடப்பட்ட ஆசிரியர் தேர்வு நடைமுறையை மீண்டும் தொடர்ந்து, தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மனுதாரர்கள் 410 பேருக்கும் விரைந்து பணிநியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் போட்டி தேர்வு நடத்துவது என்று 2018 ஆம் ஆண்டு எடுத்த முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டுமே தவிர, அதற்காக முந்தைய காலத்தில் துவங்கப்பட்ட தேர்வு நடைமுறையை கைவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

Tags :
Job AppoinmentMadras High CourtTeachersTN Govt
Advertisement
Next Article