Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
01:47 PM Oct 17, 2025 IST | Web Editor
கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பரவலா மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த ராஜேஸ்வரி, சின்னப்பொன்னு, கனிதா, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Cuddaloreedappadi palaniswamiEPSLightning StrikeTamilNadu
Advertisement
Next Article