Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செந்தில் பாலாஜி உள்பட புதிதாக 4 அமைச்சர்கள் பதிவியேற்பு! ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

04:08 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

செந்தில் பாலாஜி உள்பட புதிதாக 4 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

Advertisement

வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

அதன் அடிப்படையில் இன்று (29.9.2024) மதியம் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அப்போது பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார்.

இதன்படி முறையே ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், எஸ்.எம்.நாசர் வரிசையாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் உள்பட அனைத்து அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் வலப்புறம் முதலமைச்சர் முக.ஸ்டாலினும் இடப்புறம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், புதிதாக பதவியேற்ற நான்கு அமைச்சர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Next Article