For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பயணம் - தொண்டர்களை சந்திக்கிறார் வி.கே.சசிகலா!

01:20 PM Jul 16, 2024 IST | Web Editor
தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பயணம்   தொண்டர்களை சந்திக்கிறார் வி கே சசிகலா
Advertisement

தென்காசி மாவட்டத்தில் தொண்டர்களை சந்திக்க வி.கே.சசிகலா நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

அதிமுகவின் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து உரையாற்றுவதற்காக வருகிற 17.07.2024 முதல் 20.07.2024 வரை நான்கு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் வி.கே.சசிகலா  சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக சுற்றுப் பயணத்திற்கு வி.கே.சசிகலா தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து அனுமதி கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வழக்கறிஞர் பூசைத் துரை மனு அளித்துள்ளார்.  இந்நிலையில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவகுமார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நிலையில் உள்ளதால் வி.கே. சசிகலா  அதிமுகவின் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று எந்த நீதிமன்றமும் தடைவிதிக்கவில்லை என பூசைத் துரை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல அதிமுக தொண்டர்களை சந்திக்கவும், பொது மக்களை சந்திக்கவும் எந்த நீதிமன்றத்த தடையும் இல்லை. மாறாக, அரசியில் அமைப்புச் சட்டம் உறுப்பு 19ன் படி கூட்டம் கூடவும், கருத்தை வெளிப்படுத்தவும், இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்யவும் உரிமை உள்ளது என சசிகலா தரப்பில் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளருக்கு அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement