For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!

09:00 PM May 02, 2024 IST | Web Editor
ரூ 2 000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள்   சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது  வெளியான தகவல்
Advertisement

ஆந்திராவில், வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

Advertisement

ஆந்திராவில், 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரா முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே வாகன சோதனை நடத்திய போது, அவ்வழியாக 4 கண்டெய்னர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துள்ளன.

அவற்றில், ஒரு கண்டெய்னரை சோதனை செய்தபோது, அதில் 500 கோடி ரூபாய் பணம் இருப்பதும், 4 கண்டெய்னர்களிலும் 2 ஆயிரம் கோடி எடுத்து செல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்டு, பணம் முழுவதும் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, ஹைதராபாத் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தனர்.

Tags :
Advertisement