Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி - சதம் விளாசிய ரோகித், ஜடேஜா!

08:32 PM Feb 15, 2024 IST | Web Editor
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்துள்ளது. 

Advertisement

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்கியது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஜெய்ஸ்வால் மார்க் வுட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஷுப்மன் கில் டக் அவுட்டானார். பின் களமிறங்கிய ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி அணியை பின்னடைவிலிருந்து மீட்டனர். 131 ரன்கள் எடுத்த நிலையில், ரோகித் மார்க் வுட் பந்தில் அவுட்டானார். இதன் வாயிலாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Tags :
#Sports3rd testCricketind vs engJadejaRohit sharma
Advertisement
Next Article