Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3வது டி20 போட்டி - ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை ...!

09:09 AM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை டி20 தொடரை வென்றது.

Advertisement

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (ஜன.18) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  இதையடுத்து, ஜிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியன் பென்னட் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் கேப்டன் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையும் படியுங்கள் : போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை.!

அதனைத்தொடர்ந்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை களம் இறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் களமிறங்கினர். குஷல் மெண்டிஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிசங்காவுடன் டி சில்வா ஜோடி சேர்ந்தார். மேலும், 10.5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. பதும் நிசங்கா 39 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Tags :
CricketSeriesSri LankaT20 matchwinZimbabweZimbabweVSSri Lanka
Advertisement
Next Article