For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2025ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!

2025ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
03:52 PM Oct 07, 2025 IST | Web Editor
2025ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
Advertisement

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Advertisement

2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விருதுகள்  நேற்று முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன் படி முதல் நாளான நேற்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று, 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Tags :
Advertisement