Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொகுதிப் பங்கீடு: திமுக - விசிக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!

01:52 PM Mar 01, 2024 IST | Web Editor
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - வி.சி.க. இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Advertisement

2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கிறது வி.சி.க,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 எம்.பி தொகுதிகளை பெற்று திருமாவளவனும்,  வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.  அதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் விசிக சின்னத்திலும், ரவிக்குமார் தி.மு.க சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது.   இதன் தொடர்ச்சியாக, திமுக - விசிக இடையே நாளை மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
DMKElections2024thirumavalavanVCK
Advertisement
Next Article