Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!

06:57 AM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ரன்களில் வெற்றி பெற்றது.

Advertisement

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து, ரோகித் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் கடந்த ஆக. 2-ம் தேதி நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது.

இந்நிலையில், நேற்று (ஆக. 4) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். கில் 34 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஷிவம் துபே, கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அக்சர் படேல், 44 ரன்களில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிராஜ், அர்ஷ்தீப் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 42.2 ஓவர்களில் முடிவில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது.

தொடரின் அடுத்தப் போட்டி நாளை மறுநாள் (ஆக. 7) நடைபெறுகிறது. அதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். இதில் இலங்கை லெக் ஸபின்னர் ஜெஃப்ரி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

Tags :
2nd ODICricketIND vs SLIndiaNews7Tamilnews7TamilUpdatesRohit sharmaSrilanka
Advertisement
Next Article