For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! - இருவர் உயிரிழப்பு!

11:11 AM Jul 09, 2024 IST | Web Editor
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து    இருவர் உயிரிழப்பு
Advertisement

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

விருதுநகர் பகுதியில் உள்ள சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான, தனியார் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், அங்கு வெடிவிபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை செயல்பட்டாலும் விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து  வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி, சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில்,சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஜம்மு காஷ்மீர் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…

விபத்தில் காயமடைந்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளையார் குறிச்சியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாரியப்பன் மற்றும் முருகன் எனும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 2 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement