For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறைகளில் பிறந்த 196 குழந்தைகள் - மேற்குவங்கத்தில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

04:14 PM Feb 09, 2024 IST | Web Editor
சிறைகளில் பிறந்த 196 குழந்தைகள்   மேற்குவங்கத்தில் அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிறைகளில் அதிகளவில் பெண்கள் கர்ப்பமாகியிருப்பதும் , 196 குழந்தைகள் சிறைகளிலேயே பிறந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிறைச் சாலைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் இதுவரை 196 குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கொல்கத்தா  உயர்நீதிமன்றத்தில்  இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைகள் என்பது சீர்திருத்ததிற்கானவை தான். ஆனால்  சிறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி' கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் அமிக்ஸ் க்யூரி தெரிவித்துள்ளதாவது..

மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள்.  இதுவரை 196 குழந்தைகள் சிறைச்சாலைகளிலேயே பிறந்துள்ளனர். எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம்,  நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வில் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

சிறைகளில் சீர்திருத்தம் மற்றும் பெண் கைதிகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல்,  பெண் கைதிகளின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement