For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!

06:00 PM May 20, 2024 IST | Web Editor
மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்
Advertisement

சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செல்போன் எண்கள் குறித்து மக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்த 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் சைபர் மோசடி மூலமாக மக்கள் இழந்த ஒட்டுமொத்த தொகை ரூ.10,319 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6,94,000 புகார்கள் வந்துள்ளன.

மோசடியாளர்கள் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடிகளை செய்துவிட்டு, பின்னர் சிம் கார்டு மற்றும் மொபைலை மாற்றுகின்றனர். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

ஒரு மொபைல் போனில் பல ஆயிரக்கணக்கான சிம்கார்டுகளை பயன்படுத்துவது,  ஒரு மாநிலத்தில் வாங்கிய சிம்கார்டை அண்டை மாநிலங்களில் மோசடிக்குப் பயன்படுத்தப்படுவது என பல வழிகளில் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் தொழில்நுட்பத்தின் உதவியால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு எண்ணிலிருந்து பல எண்களுக்கு அழைப்புகள் விடுப்பது. இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வந்த 18 லட்சம் சிம் கார்டுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

புகார்களின் அடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மே 9ஆம் தேதி 28,220 செல்போன்களை முடக்கவும், 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்துவோரின் தகவல்களை மறு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறது. அதில், 10 சதவீத செல்போன் எண்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. மற்ற அனைத்து எண்களும் ஆய்வுக்குட்படுத்த பயனர்கள் முன்வராததால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement